Friday, December 21, 2007

மார்க்சியம் -ஓர் ஆய்வுப் பார்வை

மார்க்சியம் - ஓர் ஆய்வுப் பார்வை

அறிமுகம் :

மார்க்சியம் உலகத்தின் விளக்குவதற்கு மட்டுமின்றி அதனை மாற்றுவதற்கும் உரிய ஒரு செயற்பாட்டுத் தத்துவமாகக் கருதப்படும். மார்க்சியம் அடிப்படையில் ஓர் அரசியல் பொருளாதார சமுதாய தத்துவமேயாகும். மார்க்சிசம் என்ற இந்த ஒப்படையின் ஊடாக மார்சியம் என்ற முழு எண்ணக் கருத்தோட்டத்தையும் காட்ட முடியாது. இந்த ஒப்படையின் ஊடாக மார்சியத்தின் தாக்கம் பற்றி சிறிதளவும், மார்சியத்தின் தந்தையென அழைக்கப்பட்ட காரல் மார்க்கும் பக்கத்துணையாளருமான பிடடெரிக் ஏங்கலசும் பற்றியும், மார்சியம் தோன்றிய கால கட்டத்தின் சமுதாயப் பிரச்சனைகள் மற்றும் சமுதாய மாற்றம் பற்றியும் இவ்வொப்படையின் ஊடாக ஆராயவிருக்கின்றேன்.

மார்க்சியம் பற்றிய அறிமுகம் :

மார்க்சியம் என்பது ஒரு உயிருள்ள தத்துவம். உலகத்தில் ஐந்து கண்டங்களில் உள்ள தொழிலாளி வர்க்கத்தின், இதர உழைக்கும் மக்களின் உரிமை முழுக்கத்தில் கோரிக்கைச் குரலில் அது தவித்துக் கொண்டேயிருக்கும் ஒரு வகை உருமைக் குரலாகவே இருக்கும். கொத்தடிமைகளாக வெறும் கூலிக்காரக்களைப் போன்று தடத்தப்பட்ட அவலமான நிலையில் அவமதிக்கப்பட்டுக் கொண்டிருந்த தொழிலாளி வர்க்கத்திற்கு வர்க்க போதம் ஊட்டி அதை வலிமை பெற்ற மனிதனாக்கியது மார்க்ஸ் உருவாக்கிய தத்துவமே தவிர வேறெதுவும் அல்ல என்பதை யாரும் மறுக்கமுடியாது.

காரல் மார்க்சும் அவரது உயிர்த் தோழர் பிரெடரிக் ஏங்கெல்சும் சேர்ந்து உருவாக்கிய மார்க்சியத் தத்துவமானது உலகத் தொழிலாளி வர்க்கத்தின் தத்துவமாக மிளர்ந்து வியக்கதக்க சாதனைகளைச் புரிந்து வருகின்றது. இவற்றுக் செல்லாம் காரணமாக Russia புரட்சி தமது காலத்தில் வரலாற்று முத்திரையைப் பதித்துக் சென்றுள்ளது.

அறிவிலே தெளிவு
மனதிலே உறுதி
அகத்திலே
அன்பினோர் வெள்ளம்

என்ற மகாகவி பாரதியின் பாடலுக்கேற்ற பாட்டுடைத் தலைவனாக விளங்கத்திக்கவர் பேரறிஞர் காரல் மார்க்ஸ். இதனைப் போலவே காரல் மார்க்ஸ் பற்றி நூற்றாண்டு நினைவு மலர் ஒன்றில் கவியரசு வைரமுத்து இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

ஒன்று மட்டும் உறுதி!
மலையின் நதிகளெல்லாம்
சமுத்திரத்தை நோக்கி!
மானுட நதிகளெல்லாம்
மார்க்ஸ் நோக்கி!

வரலாற்று வளர்ச்சி விதிகளின்படி முதலாத்துவ சமுதாயம் அகற்றப்பட்டே தீரும். புதியதொரு கம்யூனிச் சமுதாயம் வந்தே தீரும் என்று மார்க்ஸ் பிரகடனம் செய்த நாள் முதலே அவருக்கெதிரான அவதூறுப் பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. அன்று தொடங்கிய இழிவான பிரச்சாரம் இன்று வரை தொடக்கிற்றது.

“சுமார் 160 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியிறுத்தத்தோர்வில் அவர் எழுதிய விடைத்தாள்கள் இன்று கூட மீண்டும் மீண்டும் ஆராயப்படுகின்றன. மார்கஸ் கணித விடைகளைத் தானே எழுதினாரக பிற மாணவரிடம் இருந்து காப்பியடித்தாரா என்றெல்லாம் திரும்பத்திரும்ப ஆராயப்படுகின்றன. இவை மார்க்ஸ் உண்மையான மேதையல்ல என்று அவதூள்ளை மார்க்ஸ்னின் தத்துவத்தை அவமதிப்பதற்காகவே.” (காரல் மார்க்ஸ், பக்கம் 8)

இந்த வகையிலே இக்கட்டுரையின் ஊடாக மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ், அவர்கள் பற்றியும் இவர்களின் வாழ்க்கைக் குறிப்புக்கள் பற்றியும் ஜேர்மனி நாடு பற்றியும் பார்ப்போம்.

ஜேர்மனி நாடு:

ஜேர்மனிய நாடு என்பது 1814 ஆம் ஆண்டு வரை ஒரு ஒன்று பட்ட நாடாகவே இருக்கவில்லை. முன்னைய தமிழகத்தில் இருந்நது போலவே முடிமன்னர்களையும், சிற்றரசர்களையும் ஆளுகைக்குள்ளேயே இருந்திருக்கின்றது. இத்தனிப் பிரதேசங்களை தமது சுயவிருப்பத்தின் பெயரிலேயே ஆட்சி செய்தனர். இவ்வகையாக ஆட்சி செய்தவர்கள் மக்களின் உருமைகள் ஏதுமற்ற மக்கட் கூட்டமாகவே வாழ வழி செய்தனர் எனலாம். இவ்வகையான மக்கட் கூட்டத்தில், விவசாயிகள், சிறுதயாரிப்பாளர்கள் ஆகியோர் மோசமான வர்த்தக நிலமையையும் சந்திக்க வேண்டியிருந்தது. இப்படியாக இருந்த நிலையில் இடையிடையே நடைபெற்ற யுத்தமானது ஓர் சிரமைப்பைப் பெற்ற பின்னர் 1815 ஆம் ஆண்டளவில் ஜேர்மன் ஒன்றியம் உருவாக்கப் பட்டது. இதன் பின்னர் முடிமன்னர் ஆட்சியின் கீழான பிரபுத்துவ அமைப்பாக ஜேர்மன் நாடு மாறியது எனலாம்.

கார்ல் மார்க்ஸ் (1818-1883) :

காரல் மார்க்ஸ் 1818 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதியன்று டிரியர் நகரில் பிறந்தார். அவருடைய தந்தையார் ஹென்ரிச் மார்க்ஸ், மேல் முறையீட்டு நிதிமன்றத்தல் வழக்கறினராகப் பணிபுரிந்தார். அத்துடன் ஸ்தல வழக்கறிஞர்களின் தலைவராகவும் செயற்பட்டு வந்தார். அறிவியக்கத்தின் தாக்கத்திற்கு ஆளாகியிருந்த அவர் பரந்த மனப்போக்கு, முற்போக்கு சிந்தனையோட்டம், மனித நேயம், சகிப்புத்தன்மை, நேர்மை ஆகியவற்றின் இலக்கணமாகத் திகழ்ந்தாh. காரல் மார்க்சின் தாயார் பொயர் ஹென்ரியெட் பிரெஸ்பர்க் என்பாதாகும். காரல் மார்க்ஸ் 1830 ஆம் ஆண்டு டிரியர் நகரிலுள்ள உயர்நிலைப்பள்ளியில் சேர்க்கப்ப்டார். அப்பொழுது அவருக்கு வயது 12. அப்பள்ளியின் ஆசிரியர்களுக்கு ஜேர்மன், பிரெஞ்சு அறிவியக்கத்தின் பலமான தாக்கத்திற்கு ஆளானவர்கள் என்பதோடு மிதவாத மனப்பாங்கு கொண்டவர்களாக விளங்கினர். அவ்வகையான மன்னராட்சி முறையை அவர்களும் வெறுத்தனர். இதன் காரணமாக “பிரஷ்ய மன்னரையோ அல்லது அரசாங்கத்தையே விமர்சித்து எழுதக் கூடாது என்றும் அவை தொடர்பான கேலிச்சித்திரங்கள் வரையப்படக் கூடாதுவென்றும் அவ்வரசாங்கம் உத்தரவிட்டிருந்தது.” (காரல் மார்க்ஸ், பக்கம் 15) இவையனைத்தும் சேர்ந்து காரல் மார்க்ஸ் மனதில் பிரஷ்ய முடியாட்சிக் கெதிரான வெறுப்புணர்வினை ஏற்படுத்தியது எனலாம். காரல் மார்க்ஸ் படிப்பில் மிகவும் ஆர்வத்துடன் இருந்தார். ஜேர்மன், லத்தீன், கிரீக், பிரெஞ்ச் மொழிகளைக் கற்றார். கணிதம், வரலாறு, பௌதீகம் ஆகிய வற்றுடன் மதங்களையும் குறித்துப் படித்தார். இவர் இறுதியாண்டு படிக்கின்ற போது ‘எந்த வகைப்பட்ட வேலையைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்த இளைஞனின் பிரதிபலிப்புக்கள்’ என்ற தலைப்பில் எழதிய ஆய்வுக்கட்டுரையென்றில்

“……வேலையைத் தேர்ந்தெடுப்பது என்பதானது ஒரு மனிதனின் மகத்தான உரிமையாகும்…….இந்த முக்கியமான விடயத்தை நடக்கின்ற படி நடக்கட்டும் என்று விட்டு விடமுடியாது….” எனவும் “……ஒரு வேலையைத் தேர்ந்தெடுக்கும் பொழுது நமது பிரதான வழிகாட்டியாக இருக்க வேண்டியது மனிதகுலத்தின் நலனையும், நமது சொந்ந மேம்பாட்டையும் காத்துக் கொள்ளல் என்பதே. இவ்விரு நலங்களும் ஒன்றோடென்று மோதக் கூடியவை என்று நினைக்கக் கூடாது. அதற்கு மாறாக, மனிதனின் தன்மை எவ்வாறு அறிந்துள்ளது என்றால் தன்னுடைய சக பிரயைகளின் மேம்பாட்டுக்காக, நன்மைக்காகப் பாடுபடுவதன் மூலமே தன்னுடைய மேம்பாட்டை அடையக்கூடிய வகையிலே அமைந்துள்ளது.” (காரல் மார்க்ஸ், பக்கம் 16)

“…..ஒருவர் தன்னுடைய நலனுக்காக மட்டுமே பாடுவதென்றால் அவர் ஒருவேளை பெரிய அறிவாளியாக விளங்கலாம். ஓரு பெரிய ஞானியாக விளங்கலாம். ஒரு மிகச்சிறந்த கவிஞராக விளங்கலாம். ஆனால் அவர் ஒரு பொழுதும் முழுமனிதனாக ஆக முடியாது. உண்மையிலே மகத்தான மனிதனாக விளங்க முடியாது.” (காரல் மார்க்ஸ், பக்கம் 17)

இவற்றையெல்லாம் வைத்துப் பார்கின்றபோது இளம் வயது முதலே மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்பது அவருடைய உள்ளத்தில் ஆழப்பதிந்திருந்தது என்பது அவரின் ஆய்வுரைக்காக எழுதிய கட்டுரையில் சில பகுதிகளிருந்து தெரியவருகின்றது. இவ்வகையான இக்கட்டுரைகள் இதனை நன்கு விளக்கும்.

ஆரம்பத்தில் பான் பல்கலைக்கழத்திலும் பிறகு பொர்லின் பல்கலைக் கழகத்திலும் சட்டம் பயின்றார். அங்கு தத்துவத்தில் ஆர்வம் செலுத்தனார். இவரது பல்கலைக்கழக வாழ்க்கையின் போது ஜேர்மன் தத்துவவியல் என்பது ஜரோப்பாக்கண்டத்தில் வளர்ச்சியடைந்து வந்த இயலாகவிருந்தது. இவரது பல்கலைக்கழக வாழ்க்கையில் இருக்கின்றபோது கோபமிகு இளைஞர்கள் என அழைக்கப்படும் இளம் ஹெகலியர்களிடம் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்தார்.

“ ஹெகலின் நூற்களைப் படித்த மார்க்ஸ் ஆரம்பத்தில் ஹெகலின் கருத்துக்கள் மார்க்சை பெரிதும் கவரவில்லை. ஹெகலின் கருத்துக்கள் பெரிதும் கோமாளித்தனமானலை என்றே அவர் கருதினார். ஆனால் ஹெகலின் நூற்களைப் படித்த மார்கஸ் ஹெகல் உருவாக்கிய இயக்க - இயல்முறை என்பதாகும். உலகில் நிரந்தரமானதும் இறுதியானதும் புனிதமானதும் என்று எதுவுமே கிடையாது என ஹெகல் தெளிவாகக் கூறினார். இயற்கை, சமுகம், மனித சிந்தனை உள்ளிட்ட அனைத்தும் வளர்ச்சியடைகின்றன, மாறுதல் அடைகின்றன, இது இடையிடையே விடாமல் நடந்துவரும் இயக்கக் கோட்பாடாகும் என்று ஹெகல் திட்டவட்மாக் கூறியிருக்கின்றார்.” (காரல் மார்க்ஸ், பக்கம் 21)

ஏற்கனவே கடவுள் மறுப்பு நாத்திகவாதத்தில் உறுதியாகவிருந்த மார்க்ஸ்க்கு ஹெகலியரின் மதத்தையும், கடவுளையும், வறட்டுத்தத்துவத்தையும் கோட்பாடுகளையும் துணிச்சலான விமர்சனம் செய்தமை பிடித்திருக்கின்றது எனலாம். தத்துவவியலில் அடிப்படைகளையும் அதற்கும் சமுதாயத்திற்குமுள்ள உறவு குறித்தும் ஆராய்ந்து வந்த மார்க்சின் சிந்தனைப் போக்கு ஹெகலியரின் பக்கம் ஈர்த்து எனலாம். இவற்றைப் போன்றவற்றையே மார்க்சும் விரும்பினார். அதேபோல் கருத்துச் சுகந்திரம், பத்திரிகைச் சுகந்திரம் போன்ற வற்றையும் விரும்பியவர் ஆவார்.

பத்திரிகையாளர் மார்க்ஸ் :

மார்க்ஸ் 1842 ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை தனது மனைவி ஜென்னியின் குடும்பத்தினரோடு தங்கியிருந்த வேளை ரைன் மாநிலத்திலிருந்து முதலானித்துவ வர்க்கத்தினர் பிரஷ்ய முடியாட்சி அரசாங்கத்திற்கு எதிரான ஒரு பத்திரிகையை தொடங்கவிரும்பி “ரைனிஷ் ஜைடுங்” என்ற பெயர் கொண்ட பத்திரிகை, கொலோன் நகரத்திலிருந்து வெளிவர ஆரம்பித்தது. மார்க்ஸ் ரைன் மாநில சட்டமன்றத்தைக் குறித்து தொடர்கட்டுரையென்றை எழுதினார். இது பற்றியெழுதி வெளியானவுடனேயே பிரஷ்ய அரசாங்கம் அதிர்ச்சியடைந்து தணிக்கையை அமுலுக்குக் கொண்டுவந்தது. முதலிலே இந்தப் பத்திரிகைக்கு ஆசிரியராகவிருந்த இவர், பிறகு இந்த பத்திரிகைக்கு பிரதம ஆசிரியராகப் பணியாற்றினார். புரட்சிகரமான ஜனநாயகக் கருத்துக்களை பிரச்சாரம் செய்வதை விட்டு விட்டு பிரஷ்ய அரசாங்கத்தின் பக்கமாகவிருக்க விரும்பவில்லை. இதனால் பிரதம ஆசிரியர் பதவியிலிருந்து விலத்தினார். இவர் பத்திரிகைத் துறையிலே பணியாற்றியது, மார்க்சின் உலகக் கண்ணோட்டத்தை விருவுபடுத்த உதவியதும் சமுதாய வாழ்வியலில் பொருளாதார நலங்கள் ஆற்றும் பங்கையும் அவரால் உணர முடிந்தது எனலாம்.
மார்க்ஸ் நிலப்பிரபுத்துவ அமைப்பைப் புரிந்து கொண்டவர். மக்களின் போராடும் உணர்வைக் கண்டு வளர்ந்து வரும் முதலாளித்துவ வர்க்கம் பயன்படுவதை கண்டறிந்தார். இவ் நிலப்பிரதித்துவ அமைப்க்கு எதிரான சமரசமற்ற பேராட்டம் நடத்தத் தயங்குவதையும் மார்க்ஸ் கண்டார். இவ்வகையாக மார்க்ஸ் பத்திரிகைத் துறையிலே பணிபுரிந்தமை இவரை பல வழிகளில் இட்டுச் சென்றது எனலாம். இப் பத்திரிகைத் துறையின் ஊடாக பொருளாதார, குமூகப் பிரச்சனைகளை ஆராய்வதிலும், உழைக்கும் மக்களினதும், ஏழை எழிய மக்களின் ஆதரவற்ற நிலமையையும், அதற்கான காரணிகளையும், மார்க்சின் கருத்துக்களை உருவாக்குவதிலும் இவரது பத்திரிகைத் துறை அமைந்திருந்தது. இவர் “ரைனிஷ் ஜைடுங்” பத்திரிகை நடத்தியதில் தனக்குக் கிடைத்தத அனுபவம் குறித்து பின்னாட்களில் பின் வருமாறு எழுதினார்.


“நான் நீதி இயலைப் படித்த போதிலும், தத்துவ ஞானத்திற்கும், வரலாற்றிக்கும் உட்பட்ட பாடமாகவே அதைப் படித்தேன். 1842 - 43 ஆம் வருடங்களில் ரைய்னீஷ் ஜைடுங் என்ற பத்திரிகையின் ஆசிரியர் என்ற முறையில் பொருளாயத நலன்கள் என்று வர்நிக்கப்படுகின்ற வற்றை விவாதிக்க வேண்டிய இக்கட்டான நிலை முதல் தடவையாக எனக்கு ஏற்ப்பட்டது. காட்டு விறகுகள் திருட்டுத் தனமாக எடுத்துச் செல்லப்படுவதையும், நிலச் சொத்துடமை துண்டு துண்டாகப் பிரிக்கப்படுவதையும் பற்றி ரைன்லாந்து சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதங்கள்;; மோசெல் பள்ளத்தாக்கிலுள்ள விவசாயிகளின் நிலையைப் பற்றி ரைய்னீஷ் ஜைடுங் எழுதியவற்றிக்கு எதிராக ரைன் மாநிலத்தின் ஓபர்-பிரசிடெண்ட் ஹெர்வொன் ஷரப்பர் எழுதிய அதிகாரப்பூர்வமான வாதங்கள் கடைசியாக வர்த்தகச் சுதந்திரம், வர்த்தக் காப்புவரி பற்றிய நடைபெற்ற சொற்போர்கள் என்னை முதலில் பொருளாதாரப் பிரச்சனையில் கவனத்தைச் செலுத்துமாறு செய்தன” (காரல் மார்க்ஸ், பக்கம் 44)

(அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கு ஒரு கருத்துரை என்ற நூலில் முகவுரையிலிருந்து) இதனை என்.ராமகிருஷணன் தந்திருக்கின்றார்.

இவர் பத்திரிகைத் தொழில் நடத்தியபோது ஒரு புறம் அரசாங்கத்தின் தொல்லைகளைச் சந்தித்தார். இதனைவிட சுகந்திரமானவர்கள் என அழைத்த இளம் ஹெகலியர்கள் முன்வைத்த தீவிர கொள்கையை சந்திக்க வேண்டியிருந்தது. இதனால் மார்க்சை அவர்கள் “பழமைவாதி” எனவும் “துரோகி” என்றும் வசை பாடினார்கள். இதன் பின்னர் மார்க்ஸ் அவர்கள் “சட்டம் பற்றிய ஹெகலின் தத்துவ இயல் குறித்து விமர்சனத்திற்கு ஒரு பங்குப்பணி” என்ற நூலை எழுதினார்.

இந்நூலின் ஊடாக மார்க்சின் கருத்தைப் பார்க்கின்றபோது, பொருளாதாரம் மற்றும் பொருளாயத உறவுகள் என்பவைதான் சமூக வளர்ச்சியின் அடித்தனமாக அமைந்தன என்பது மார்க்சின் கருத்தாக இருந்தது. இதனால்தான் வர்க்கப் போராட்டமும் புரட்சிகளும் உருவாகின எனக்கருதினார்.

இதனைவிட தத்துவ இயலைக்கற்றிந்தவர், முதலாலித்துவ அமைப்பை அகற்றுவதன் மூலமே சுரண்டலை ஒழிக்க முடியுமெனவும், உழைப்பாளி மக்கள் மகிழ்சியாக வாழ முடியும் எனவும் கருதினார்.

இதனைவிட சமூக அரசில் ஒழுங்கு முறையில் இருந்து மனிதகுலம் விடுதலை பெறவேண்டுமாயின் சோசலிசப் புரட்சி மூலமே சாத்தியப்படும் என்று முடிவுக்கு வந்தார் எனலாம். இதற்கு பாட்டாளி வர்க்கம்தான் சோசலிசப் புரட்சியை நடாத்தக் கூடிய திறமை பெற்ற சமூக சத்தி என நம்பினார். இதனைப் போலவே ஏங்கலிசும் அதே முடிவிற்கு வந்திருந்தார். இவர் முதலானித்துவ அரசியல் பொருளாதாரத்தையும், தத்துவ இயலையும் அலசி ஆராய்ந்து அதன் பின்னர்தான் இந்த முடிவிற்கு வந்தார். இதனால் சோசலிசம் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

சோசலிசம் :

சோசலிசம் பொருத்தமான ஒன்றா இல்லையா என தெரிந்து கொள்வதற்குரிய மற்றொரு வழி என்னவென்றால், அது பிரச்சாரம் செய்த அதனுடைய சொந்த கொள்கையையே அதனால் செயல்படுத்த முடிந்ததா என்பதை தெரிந்து அது செயல்படுத்த தகுந்த கொள்கையா இல்லையா என்பதை கண்டு கொள்வதாகும். ரசியா சோசலிசத்தை ஒரு பக்கம் பின்பற்றியும் மறு பக்கம் அதை மீறியும் வந்துள்ளது என ரசியாவின் நவீன காலச் சரித்திரம் நமக்கு எடுத்துக் காட்டுகின்றது. சரியான மார்க்சிசக் கொள்கைப்படி ரசியக் கம்யூனிசத்தை நோக்கினால், அதனுடைய பல செயல்பாடுகள் அதை ஒட்டியது எனக் கூற இயலாது. மாறாக, ரசியாவின் சாதனைகள் என்பது, சோவியத் அமைப்பில் மார்க்சிசத்தை இழைய விட்டதால் உண்டானது என்பதை விட அதை நிராகரித்ததால் உண்டானது. சோசலிசக் கொள்கைப் பிரகாரம் பாட்டாளி வர்க்கமே புரட்சியைக் கொண்டு வரும் ஒரு இயக்கம் என்பதாகும். இதனால்தான் சோசலிசப் புரட்சி முதலில் இங்கிலாந்தில் கொண்டு வரப்படும் என்று மார்க்சு முன்னறிவிப்புச் செய்தார். ஏனெனில் இங்கிலாந்தில்தான் முதன் முதலில் மற்ற முதலாளித்துவ நாடுகளுக்கு மிகவும் முன்பாகவே தொழிற்புரட்சி தோன்றி அதனுடைய முதிர்ச்சியையும் முழுமையையும் அடைந்திருந்தது: பாட்டாளிவர்க்கத்தினரின் எண்ணிக்கையும் சக்தியும் மிகவும் உணர்வுடன் இருந்தது.

இந்தவிடத்திலே மார்க்ஸ் அவர்கள் “சட்டம் குறித்து ஹெகலின் தத்துவ விமர்சனததிற்கு ஒரு பங்குப்பணி” என்ற தலைப்பிலே எழுதிய கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில் அவர்இ நடப்பிலுள்ள சமுதாய அமைப்பை எதிர்த்து பேர்ப்பிரகடனம் செய்ததுடன், பாட்டாளி வர்க்கம் என்பதுதான் சோசலிசப் புரட்சியை நடத்தக்கூடிய திறன் பெற்ற சமுதாய சத்தி என்ற முடிவுக்கு வந்திருந்தார் என்பதைக் கவனிக்க கூடியதாகவுள்ளது.

சோசலிசத்தின் மிகவும் முக்கியமான கொள்கை கூட்டுடமையாகும். சோசலிசக் கருத்தியலின்படி, தனியுடமை என்பது குறுகிய காலத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படக் கூடியது. அதனால்தான் கூட்டுடமை என்பது சோசலிச நடைமுறைகளின் ஆரம்பமாகவும் இறுதியானதாகவும் கருதப்படுகின்றது. பொதுவாகப் பார்த்தால் சோசலிசம் உழைக்காமல் வந்த வருமானத்திற்கு மரண எதிரியாகும், அதை எல்லா வகையான சுரண்டலிற்கும் மூலகாரணமாகவும் கருதியது எனலாம்.

லெனின் மிகவும் சந்தேகமற்ற வார்த்தைகளில் மறைமுக வரிகள் பற்றிக் கூறுகையில்: மறைமுக வரிகள் உண்மையில் ஏழைகளின் சுமத்தப்படும் ஒன்றேயாகும். (Collectd Works. vol. II, 3rd edition, p. 225) எனக் கூறியிருக்கின்றார். இந்த வகையிலே சோசலிசம் மற்ற தொழிலாளிகளின் உழைப்பிலிருந்து பயன் பெறுவதை தடை செய்வதும் சோசலிச அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகும். இனி மார்க்சியத்தின் செயற்பாடுகளைப் பார்போம்.
மார்க்சியத்தின் ஊடாக உலகத் தொழிலாளர்களை ஒன்று சேர்த்து அவர்கள் அனைவரையும் ஒன்றினைக்க முயற்சி செய்யப்பட்டது எனலாம்.

“உலகம் முழுவதையும் மாற்றியமைக்கும் வரலாற்றும் சிறப்புமிக்க பணியை துவக்கிவைத்த மேதை மார்க்ஸ் உலகத்தின் குடிமகன், உலகம் முழவதிலும் உரியவர். எந்த தனியொரு நாட்டிற்கும் மட்டும் சொந்தமானவரல்ல ஆவார்.” (காரல் மார்க்ஸ், பக்கம் 71)
மார்க்ஸ் தன் வாழ்நாள் முழுவதிலும் சர்வதேசவாதியாகவே இருந்தருக்கின்றார். இனம், மொழி, தேசம், போன்ற வரம்புகளைக் கடந்த மனிதராக, உலக மனிதராக நின்றார் எனலாம்.
மார்க்சும், ஏங்கெல்சும் எழுதிய “ஜெர்மன் தத்துவம்” என்ற நூல் இயற்கை, மனிதன், சமூக உறவுகள் போன்றவற்றின் வளர்ச்சி அமைப்பு, மற்றும் வளர்ச்சி குறித்து பொது விதியை முன் வைத்தனர். இதுதான் இயக்கவியல் பொருள்முதல் வாதம் என அழைக்கப்படுகின்றது. இவை முற்றிலும் புதிய தன்மையைக் கொண்ட தத்துவத்தைக் கொண்டவை.

“ஆணும், பெண்ணும், அரசியல், விஞ்ஞானம், கலை, ஓவியம், மதம், போன்றவற்றை குறித்தும் ஆராயும் முன்னர்; அவர்களுக்கு உண்ண உணவும், குடிக்க நீரும், உடுத்த ஆடையும், வசிக்க வீடும் வேண்டியுள்ளன. அதாவது பொருட்கள் உற்பத்தி என்பதும், உயிர் வாழ்வதற்கு தேவையான பொருட்கள் உற்பத்தி என்பதும் அதன் மூலம் மக்களின் பொருளாதார வளர்ச்சிக் கட்டம் என்பதும்தான் சமூக அடித்தனமாக உள்ளன என்று மார்க்சும், ஏங்கல்சும் இந்நூலில் கூறினர்” (காரல் மார்க்ஸ், பக்கம் 73)

“ உணர்வு என்பது வாழ்க்கையைத் தீhம்மானிக்க வில்லை. ஆனால் வாழ்க்கை என்பதுதான் உணர்வினைத் திர்மானிக்கின்றது என்றும் மார்க்ஸ்சும், ஏங்கெல்சும் பிரகடணம் செய்தனர்.” (காரல் மார்க்ஸ், பக்கம் 74)

இப்படியாக பிரகடணத்தைச் செய்த மார்க்சும், ஏங்கெல்சும் தொழிலாளி வர்க்கத்திற் கென்று ஒரு புரட்சிகரமான தத்துவக் கோட்பாட்டை உருவாக்கி அதன் மூலமாக உலக நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களிடையே பரப்புவதற்கு பாடுபட்டனர்.

இந்த வகையிலே ‘மதிப்பு’ (Value) என்பது சரக்கில் பொதிந்துள்ள மனித உழைப்புத்தான் என்று அவர் கூறினார். இது பற்றி என். ராமகிருஷணன் தனது “கார்ல் மார்க்ஸ்” என்ற நூலிலே ‘தத்துவத்தின் வறுமை’ என்ற தலைப்பில் கூறியதாவது.

“முதலாளித்துவ அமைப்பில் பணம் என்பது, முரண்பாடுகளை உருவாக்கவில்லை. முதலாளித்துவ அமைப்பு என்பதே அடிப்படையில் முரண்பாடாக உள்ளது. மதிப்பு மற்றும் பணம் என்பவை இருக்க வேண்டிய தேவையை அது தேவையாக்கி உள்ளது. மார்க்ஸ் பின்வருமாறு சுருக்கமாகக் கூறினார்: “ பணம் என்பது ஒரு பொருள் அல்ல, அது ஒரு சமூக உறவு.” முதலாளித்துவத்தின் சிக்கலான உள் முரண்பாடுகளைப் பணத்தை அகற்றுவதன் மூலமாக ஒழித்துவிட முடியாது. ஏனென்றால், இந்த முரண்பாடுகள் உற்பத்தி வடிவில் இருந்து தேன்றியுள்ளன என்பதுடன், முதலாளித்துவ தனிச் சொத்துரிமையின் விளைபொருளாகுமென்றும் மார்க்ஸ் சுட்டிக்காட்டினார்.” (காரல் மார்க்ஸ், பக்கம் 81)

என என். ராமகிருஷணன் தனது “கார்ல் மார்க்ஸ்” என்ற நூலிலே ‘தத்துவத்தின் வறுமை’ என்ற பகுதியில் எடுத்துக்காட்டியுள்ளார்.

இதனைவிட தொழிலாளிகளின் பொருளாதாரப் போராட்டங்கள், அரசியல் புரட்சிகர நடவடிக்கையாக வளர்ந்தே தீருமென்று மார்க்ஸ் அவர்கள் கூறியிருக்கின்றார் எனப் பார்க்க முடிகின்றது. இதன் காரணத்தால் ஒரு வர்க்கத்திற்கு எதிரான இன்னுமொரு வர்க்கம் தொடரும் போராட்டங்களை ஒரு வகையிலே அரசியல் போராட்ங்களேயாகும் என தெளிவு படுத்தியுள்ளார்.

மார்க்சியம் என்பது ஒரு உயிருள்ள தத்துவமாக விளங்கும் போதிலும், அது உலகத்தில் உள்ள தொழிலாளி வர்க்கத்தின் உழைக்கும் மக்களின் உரிமை முழுக்கத்தில் கோரிக்கைச் குரலில் அது தவித்துக் கொண்டேயிருக்கின்றது எனலாம். மார்கசியத்தை மார்க்சிய வாதிகளின் வழியாகப் புரிந்து கொள்வதுதான் முதன்மையானதாகும். காரணம், மார்க்சிய வாதிகளின் கருத்துக்கள் வரலாற்றுரீதியில் புரிந்து கொள்ளத்தகுந்தவை. சுருங்கக்கூறின், மார்க்சியத்தின் அழகியலைப் பின்னால் வந்தவர்கள் எப்படி புரிந்து கொண்டு எப்படி விளங்கினார்கள், எப்படி வளர்த்தார்கள், எப்படியெல்லாம் இணைந்து வாழ்ந்தனர், எதையெல்லாம் மறுத்தனர், வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நாடுகளில் எவ்வாறு தன்மை முதன்மை கொடுத்து மார்க்சியத்தை அங்கிகரித்து வாழ்ந்தனர் என்பதையெல்லாம் பார்க்கக் கூடியாதாகவிருக்கும் எனலாம். இந்த வகையிலே ஆய்வுகள் மேற்கொள்ளப்படுமாயின் இன்னும் மார்க்சியம் வாழ்ந்து கொண்டே இருக்கும்.



துணை நூற்கள்:

ராமகிருஷணன். என் (1993) கார்ல் மார்க்ஸ்: பாட்டாளி வர்க்கத்தின் தத்துவ மேதை, சென்னை, சவுத் ஏசியன் புக்ஸ்.

நடராசன். தி.சு (1990) திறனாய்வுக் கொள்கைகள், மதுரை, அன்னம் புத்தகமையம்.


1 comment:

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

மிகப் பெரிய சிந்தனையாளர் மார்க்சைப் பற்றிய மிகச் சிறிய கட்டுரைதான் என்றாலும் வாழ்த்துகள்.
தொடர்ந்து எழுதுங்கள் நன்றி வணக்கம்.
--நா.முத்து நிலவன், புதுக்கோட்டை-4
http://valarumkavithai.blogspot.in/